/* */

திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால், 5 அரசு பஸ்கள் ஜப்தி

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால், நேற்று 5 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட் ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால்,  5 அரசு பஸ்கள் ஜப்தி
X

Tirupur News,Tirupur News Today- விபத்து நஷ்ட ஈடு வழங்காததால், திருப்பூரில் அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. (கோப்பு படம்) 

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால், நேற்று 5 அரசு பஸ்களை ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 55). இவர் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தார். கடந்த 13-6-2012 அன்று அனுப்பர்பாளையத்தில் நடந்து சென்றபோது, அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர், திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். வீரம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து 54 ஆயிரத்து 44 இழப்பீட்டை அரசு போக்குவரத்து கழகம் வழங்க 1-12-2021 அன்று கோர்ட் உத்தரவிட்டது.

இதுவரை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட் வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

இதேபோல் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி (24). பனியன் கம்பெனி டெய்லர். இவர் கடந்த 21-1-2019 அன்று தனது கணவருடன் பைக்கில், கள்ளிமந்தையம் அருகே சென்றபோது அரசு பஸ் மோதி கஸ்தூரி உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். கடந்த 16-9-2022 அன்று ரூ.19 லட்சத்து 79 ஆயிரத்து 400 இழப்பீடு வழங்க, கோர்ட் உத்தரவிட்டும் இதுவரை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் ராஜா (42). பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் கடந்த 10-5-2019 அன்று தண்ணீர்பந்தலில் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கடந்த 18-7-2022 அன்று ரூ.17 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூர் காலேஜ் ரோடு ஜீவாநகரை சேர்ந்தவர் கணேசன் (20). கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த 11-4-2012 அன்று பைக்கில் பொல்லிக்காளிபாளையம் அருகே சென்றபோது, அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர், திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 31-7-2013 அன்று, ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி, அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்து (18). கல்லூரி மாணவி. இவர் கடந்த 7-12-2015 அன்று காரில் சூலூருக்கு சென்றபோது, அரசு பஸ் மோதியதில் காயமடைந்து சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். விபத்து நஷ்ட ஈடு கேட்டு அவர், திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த 26-9-2022 அன்று, ரூ.7 லட்சத்து 9 ஆயிரத்து 291 வழங்க கோர்ட் உத்தரவிட்டும் இதுவரை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி அரசு பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர்.

மேற்கண்ட 5 வழக்குகளில், விபத்து நஷ்டஈடு வழங்காததால் ஒரே நாளில் ஐந்து பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 July 2023 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்